அதிமுக, திமுகவைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகி பாஜக வில் ஐக்கியம்

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (22:30 IST)
கரூர் மாவட்ட தலைவர் விவி செந்தில்நாதன் அனிவரையும் பொன்னாடை அணிவித்து கட்சியில் இணைத்து கொண்டார்.
 
 
கரூர் மாவட்டம், தாந்தோன்றி கிழக்கு ஒன்றியம் உப்பிடமங்கலம் பகுதியை சார்ந்த திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து வெளியேறி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தாந்தோன்றிமலை கிழக்கு ஒன்றிய தலைவர் பாலுசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட செயலாளர் விக்டோரியா வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.

மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையால் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றமடைந்து மக்கள் எழுச்சியோடு பாஜக கட்சியில் இணைந்து வருவதை எடுத்து கூறிய மாவட்ட தலைவர் விவி.செந்தில்நாதன், வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல் இந்திய அளவில் தமிழகம் மிகப்பெரிய எழுச்சி பெறும் என்றும் அதற்கு அண்ணாமலை அவர்கள் கடுமையாக உழைத்து வருவதாகவும் கட்சியில் இணையும் நிர்வாகிகள் திமுக அரசின் அவலநிலையை எடுத்து கூறினாலே போதும் என்றும் மத்தியில் பாஜக ஆளும் அரசின் சாதனைகளையும் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்ல வேண்டும், இது மட்டுமில்லாமல், கரூர் மாவட்டம் பாஜக வின் எக்கு கோட்டையாக நிருபிக்க வரும் தேர்தல் நமக்கு பாடமாக நினைத்து, அதற்காக அனைவரும் தீவிரமாக உழைக்க வேண்டும் என்றும் மாவட்ட தலைவர் விவி.செந்தில்நாதன் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR-க்கு பின் ஓட்டு இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?!... வாங்க பார்ப்போம்..

ஓசூரில் காவேரி கூக்குரல் சார்பில் ‘ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு’ கருத்தரங்கு: மத்திய வேளாண்துறை அமைச்சர் பங்கேற்பு..!

வெள்ளை மாளிகையில் டிரம்ப் வைத்த கிறிஸ்துமஸ் விருந்து.. ’தசாவதாரம் பட நடிகை பங்கேற்பு..!

சென்னை வரைவு வாக்காளர் பட்டியல்.. கொளத்தூரில் 1 லட்சம்.. சேப்பாக்கத்தில் 89 ஆயிரம் பெயர்கள் நீக்கம்..!

வங்கதேசம் போல் தான் மேற்குவங்கமும் உள்ளது.. சட்டம் ஒழுங்கு குறித்து பாஜக விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments