பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி தாலுகா அலுவலகத்தை மூடும் போராட்டத்தில் ஈடுபட்ட - தமிழ் புலிகள் கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் கைது

J.Durai
செவ்வாய், 12 மார்ச் 2024 (15:40 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.நடுப்பட்டி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட அருந்தியினர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர்.,
 
இந்த மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு செல்லும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், 7 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டுத் தர கோரியும் மாவட்ட நிர்வாகத்திடமும், உசிலம்பட்டி வருவாய்த்துறையினரிடமும் பலமுறை மனு அளித்து முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.,
 
இந்நிலையில் இன்று பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தை மூடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்., தாலுகா அலுவலகத்தை மூட வந்த மக்களை போலீசார் தடுத்தி நிறுத்திய சூழலில், போலீசாரின் தடையை மீறி அலுவலகத்தின் கதவுகளை மூடினர்., தாலுகா அலுவலகத்தை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை: வானிலை எச்சரிக்கை..!

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் எத்தனை நாட்கள்? மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போன சாலை! - அதிர்ச்சி வீடியோ!

இதை மட்டும் செய்யுங்க.. நோபல் பரிசு வீடு தேடி வரும்! - ட்ரம்புக்கு ஐடியா சொன்ன பிரான்ஸ் அதிபர்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. ஆறு மாதங்களுக்குள் முதற்கட்ட குற்றப்பத்திரிகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments