Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநில அளவிலான கேலோ இந்தியா உமன்ஸ் லீக்...250க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்பு

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (20:25 IST)
கரூரில் மாநில அளவிலான கேலோ இந்தியா உமன்ஸ் லீக் "பென்கட் சிலாட்" விளையாட்டுப் போட்டி 18 மாவட்டங்களை உள்ளடக்கிய 250க்கும் மேற்பட்ட  வீராங்கனைகள் பங்குபெற்று தற்காப்பு கலைகள் செய்து அசத்தல்.
 
கராத்தே, ஜூடோ போன்ற மார்சியல் ஆர்ட்ஸ் வகை கலைகளில் "பென்கட் சிலாட்" என்ற தற்காப்பு கலையும் தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த பென்கட் சிலாட் தற்காப்புக் கலையின் மகளிர்க்கான மாநில அளவிலான லீக் போட்டி கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. 
 
தமிழ்நாடு பென்கட் சிலாட் ஆப் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் கரூர், திருச்சி, கோவை, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 180 வீராங்கனைகள் பங்கேற்றனர். மூன்று வயது சிறுமிகள் முதல் 14 வயதுக்கு மேற்பட்ட சிறுமியர் மற்றும் பெண்கள் பங்கேற்ற இந்த மாநில அளவிலான போட்டியில் தங்கல், ரகு, கண்டா, சோலோ, டாண்டிஸ் என்ற ஐந்து பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தனித்தனியாகவும், குழுவாகவும் மோதிக்கொண்ட வீராங்கனைகள் போர் கருவிகளை கொண்டு, தற்காப்பு கலைகளை செய்து அசத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் வெற்றி பெறுகிற வீராங்கனைகள் தேசிய அளவிலான விளையாட்டுக்கு தகுதி பெருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments