Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்குழந்தைகள் 25 பேர் வாந்தி மயக்கம்… மதிய உணவால் ஏற்பட்ட பிரச்சனையா?

சிதம்பரம்
Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (17:43 IST)
சிதம்பரம் அருகே ஒரு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் ஆகிய பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் ஆகிய பிரச்சனைகளால் அவதிப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் இன்று சாப்பிட்ட முட்டை அழுகிய நிலையில் இருந்ததால் புட்பாய்சன் ஆகி இருக்கலாமா என்ற கோணத்தில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments