Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீவுத்திடலில் பாலம் உடைந்து 15க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம்

தீவுத்திடலில் பாலம் உடைந்து 15க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம்
, ஞாயிறு, 5 ஜூன் 2016 (19:36 IST)
சென்னை தீவுத்திடலில் மாராத்தான் போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் சென்ற மரப்பாலம் சரிந்து உடைந்ததில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்துள்ளனர்.
 

 
சென்னையில், பிங்கத்தான் என்ற பெயரில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தை தனியார் அமைப்பு ஒன்று நடத்தியது. இதில் 3000-க்கும் பெண்கள் கலந்து கொண்டனர்.
 
தீவுத்திடலில் கூவம் ஆற்றை இணைக்கும் வகையில் மரப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு சிலர் மட்டுமே செல்லக்கூடிய இந்தப் பாலத்தில் அதிகளவு பெண்கள் ஏறிச் சென்றுள்ளனர்.
 
இதானால் பாரம் தாங்காமல், நடைப்பாலம் உடைந்து திடீரென சரிந்தது. இதில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். மற்ற பெண்கள் உடனடியாக பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதையடுத்து அந்த பாதை அடைக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக - காங்கிரஸ் கூட்டணியைப் பிளவுபடுத்த பாஜக முயற்சி - கருணாநிதி தாக்கு