Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 நகரங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்: இன்னும் எத்தனை நாளைக்கோ?

Webdunia
வியாழன், 16 மே 2019 (21:25 IST)
அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததில் இருந்தே சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் வெயில் நெருப்பாக கொதித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர். குறிப்பாக குழந்தைகளும், முதியவர்களும் பெரும் சிரமத்தில் உள்ளனர். 
 
ஓருசில நகரங்களில் கோடை மழை பெய்து வந்தாலும் பகலில் வெயில் பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டியும் ஒருசில நகரங்களில் 100 டிகிரிக்கு அருகிலும் உள்ளது. 
 
வேலூரில் 106 டிகிரியும், மதுரை, திருத்தணி, திருச்சி ஆகிய நகரங்களில் 105 டிகிரியும், நெல்லையில் 104 டிகிரியும், சேலத்தில் 100 டிகிரியும் இன்று வெயில் அடித்தது. அதேபோல் தருமபுரியில் 99 டிகிரியும், சென்னை கடலூர், புதுவை ஆகிய பகுதிகளில் 97 டிகிரியும், கோவை, தூத்துக்குடியில் 95 டிகிரியும் வெயில் அடித்தது. குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 72 டிகிரி வெயில் அடித்தது. 
 
இம்மாத இறுதி வரை வெப்பம் அதிகம் இருக்கும் என்றும், ஜூன் முதல் வாரத்திற்கு பின்னரே வெயிலின் தாக்கம் குறையும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments