Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நிவாரணம்: முதல்வர் நிவாரண நிதிக்கு 100 கோடிக்கு மேல் வந்த பணம்!

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (17:38 IST)
கொரோனா நிவாரண நிதி அளிக்கும்படி மக்களிடம் எடப்பாடி பழனிச்சாமி கேட்டிருந்த நிலையில் இப்போது வசூலாகியுள்ள தொகையின் விவரம் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் 11,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு முதலில் 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டு இப்போதும் மேலும் 20 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் அதற்கான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்களிடமும் நிறுவனங்களிடம் இருந்தும் நிதி அளிக்குமாறு முதல்வர் மற்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில் முதல்வர் நிவாரண நிதிக்குப் பொது மக்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை நிதியளித்து வருகின்றனர். இதுவரை எவ்வளவு நிதி வசூல் ஆகி உள்ளது என்பது தொடர்பான விவரம் இப்போது வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதல்வர் நிவாரண நிதிக்கு 134 கோடியே 63 லட்சம் நன்கொடையாக வந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சார்பாக 14 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 492 ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments