Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேறு ஆசிரியர்களுக்கு வீடியோவை பகிர்ந்த ராஜகோபாலன்! – மேலும் சிலர் கைதாக வாய்ப்பு!

Webdunia
வியாழன், 27 மே 2021 (13:40 IST)
சென்னையில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மாணவிகளின் வீடியோக்களை மேலும் சில ஆசிரியர்களுக்கு அனுப்பியதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் ராஜகோபாலனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ராஜகோபாலனிடம் நடத்திய விசாரணையில் ராஜகோபாலன் மாணவிகளை மிரட்டி பெற்ற வீடியோக்களை மேலும் சில ஆசிரியர்களுக்கு பகிர்ந்ததாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும் சில ஆசிரியர்களையும் போலீஸார் கைது செய்து விசாரிக்க முடிவெடுத்துள்ளனர். மேலும் ஆன்லைன் வகுப்புகளுக்கு பொறுப்பாளராக செயல்பட்டவரையும் விசாரிக்க போலீஸார் முடிவெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்