Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேறு ஆசிரியர்களுக்கு வீடியோவை பகிர்ந்த ராஜகோபாலன்! – மேலும் சிலர் கைதாக வாய்ப்பு!

Webdunia
வியாழன், 27 மே 2021 (13:40 IST)
சென்னையில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மாணவிகளின் வீடியோக்களை மேலும் சில ஆசிரியர்களுக்கு அனுப்பியதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் ராஜகோபாலனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ராஜகோபாலனிடம் நடத்திய விசாரணையில் ராஜகோபாலன் மாணவிகளை மிரட்டி பெற்ற வீடியோக்களை மேலும் சில ஆசிரியர்களுக்கு பகிர்ந்ததாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும் சில ஆசிரியர்களையும் போலீஸார் கைது செய்து விசாரிக்க முடிவெடுத்துள்ளனர். மேலும் ஆன்லைன் வகுப்புகளுக்கு பொறுப்பாளராக செயல்பட்டவரையும் விசாரிக்க போலீஸார் முடிவெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்