Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி வீட்டிற்கு மேலும் துணை ராணுவ படையினர் வருகை: என்ன நடக்கப்போவுது?

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (15:39 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் இருக்கும் நிலையில் தற்போது மேலும் சில துணை இராணுவ படையினர் வந்து இறங்கி இருப்பதாக இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர் என்பதும் அதுமட்டுமின்றி சென்னை தலைமைச் செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையிலும் சோதனையை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
அதுமட்டுமின்றி பணபரிவர்த்தனை குறித்து ஆலோசிக்க வங்கி அதிகாரிகளை அழைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் சில சந்தேகங்களை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு மேலும் 10 துணை ராணுவ படையினர் வருகை தந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஏற்கனவே வங்கி அதிகாரிகளுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது கூடுதல் துணை ராணுவ படையினர் வருகை தந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments