என்ன பண்ணாலும் ஆட்சிக்கு வராது: பாஜகவிற்கு ஆப்பு...

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2019 (21:18 IST)
இந்தியா டுடே டிவி சேனல் மற்றும் கார்வி இன்சைட்ஸ் இணைந்து தேசத்தின் மனநிலை (#MoodOfTheNation) என்ற பெயரில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தினர். இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 
 
கருத்து கணிப்பில் வெளியான சில கவனிக்கப்பட வேண்டிய அமசங்கள்:
 
1. தேசிய ஜனநாயக கூட்டணி 2014 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 336 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் இம்முறை 257 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடியும். 
 
2. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கடந்தமுறை 59 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. ஆனால் இம்முறை புதிதாக ஒருங்கிணைந்துள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியுடன் சேர்த்து பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளை தொடக்கூடும்.
 
3. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் அனைவரும் இணைந்து சுமார் 14 தொகுதிகளை வெல்லக்கூடும். இதில் ஒரு எம்பி பலம் குறைவாக இருந்தாலும், பெரும்பான்மையை இழந்துவிடும். 
 
4. 14 தொகுதிகளை கைப்பற்ற கூடிய பிற கட்சிகள் என்பது அதிமுக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகள். 
 
5. மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆகியவை தலா 44% வாக்குகளை பெறக்கூடும். பிறர் 12% வாக்குகளை பெறக்கூடும்.
 
6. தொகுதிகள் என்று வரும்போது தேசிய ஜனநாயக கூட்டணி 257 தொகுதிகளிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி 272 தொகுதிகளையும் கைப்பற்றும்.
 
குறிப்பு: பெரும்பான்மைக்கு 272 எம்பிக்கள் தேவை  என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்சலுக்கு என்று முதல்முறையாக தனி ரயில்.. சென்னை - மங்களூரு இடையே முதல் ரயில்..!

மகனை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர பெற்ற தாயே கூறினாரா? லிவ்-இன் துணைவர் தூண்டுதலா?

மோடி முன் பேசிய ஐஸ்வர்யா ராய் கருத்துக்கு திமுக அமைச்சர் பாராட்டு: என்ன பேசினார்?

என் உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்.. மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்த 16 வயது மாணவன் கோரிக்கை..!

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: ஸ்பாட் புக்கிங் குறைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments