மத்திய அரசின் பழைய ரூபாய் மாற்றம் குறித்த அறிவிப்பால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாதம் சம்பளம் தேதி நெருங்கிவிட்டது, இன்னும் ஏடிஎம் மையங்களில் பணம் விநியோகம் இல்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். வங்கிகளில் பணம் தட்டுபாடு ஏற்பட்டு, மக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும் முடியாமல் திணறுகின்றனர்.
வங்கி கணக்கில் இருந்து அன்றாட செலவுக்கு பணம் எடுப்பதற்காக, அனைவரும் ஏடிஎம் மையங்களின் வாயிலில் மணி கணக்கில் காத்து கிடக்கிறனர். வங்கியிலும் பணம் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் ஏடிஎம் மையங்களில் அவ்வப்போது கிடைத்து வந்த பணமும் தற்போது கிடைப்பதில்லை.
புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே ஒரு சில ஏடிஎம் மையத்தில் கிடைக்கிறது. இதனால் சில்லரை தட்டுபாடும் ஏற்பட்டுள்ளது. இன்று முதல் 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மாத சம்பளம் நாள் நெருங்கிவிட்டது. ஏடிஎம் மையங்களில் பணம் கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் அடுத்த மாத செலவுகளுக்கு என்ன செய்வது என்ற அச்சத்தில் உள்ளனர். இந்த மாதம் சில்லரை தட்டுபாடுதான் இருந்தது. இதே நிலை நீடித்தால் அடுத்த மாதம் அன்றாட வாழ்க்கை திண்டாட்டம்தான்.