Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (13:57 IST)
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சியால் மழை பெய்து வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு அதிகமான மழைப்பொழிவு வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படுகிறது. தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை மறுநாள் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. முன்னதாகவே வடகிழக்கு பருவமழை தொடங்க இருந்த நிலையில் சிட்ரங்க் புயலால் பருவமழை தொடங்குவது தாமதமானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் படிப்படியாக மழை அளவு உயரும் என்றும் நவம்பர் 4ம் தேதி வரை மழை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments