அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மை: மருத்துவர்கள் கண்காணிப்பு..!

Mahendran
செவ்வாய், 17 டிசம்பர் 2024 (10:50 IST)
அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் குரங்கம்மை நோய் தொற்று பல உயிர்களை பலியாக்கிய நிலையில், அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய 26 வயது இளைஞருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வயநாடு பகுதியை சேர்ந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருந்தாலும் தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், தலசேரி என்ற பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருக்கும் குரங்கம்மை தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் சமீபத்தில்தான் துபாயிலிருந்து கேரளா திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகள் வெளியான பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments