Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில் முன்பு உணவருந்தாமல் இரு நாட்களாக கண்ணீர் பெருக்கெடுக்க அமர்ந்துள்ள குரங்கால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2015 (11:31 IST)
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைதீஸ்வரன்கோயிலில் வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாக விளங்கிவருகிறது. கோவிலின் வடக்கு பிரகாரத்தில் பத்ரகாளியம்மன் தனி சன்னதி உள்ளது. இந்நிலையில் நேற்று முந்தினம்  மதியம் முதல் ஒரு குரங்கு அம்மனை வழிபட்டபடியே அமர்ந்திருந்தது,இதனை கண்ட பக்தர்கள் குரங்குக்கு பழம்,பால் மற்றும் உணவுகள் வைத்தனர்.

ஆனால் எதையும் உட்கொள்ளாத குரங்கு கருவறை அருகே அமர்ந்து அழுதுகொண்டே அம்மனை பார்த்தபடியே உள்ளது. அருகில் செல்லும் பக்கதர்களை எதுவும் செய்யாமல் சுவற்றில் சாய்ந்த நிலையிலேயே அமர்ந்துள்ளது. இரண்டு நாட்களாக குரங்கு உணவருந்தாமல் கருவறை அருகே அமர்ந்து வணங்குவது பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குரங்கை காண பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
 

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

Show comments