Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் ரித்தீஷ் மீது பண மோசடி புகார்

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (04:20 IST)
நடிகரும், முன்னாள் திமுக எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

 
சென்னையைச் சேர்ந்த ஆதிநாராயண சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தான் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் என்றும், அமெரிக்க நிறுவனத்தில் பணியாற்றியபோது ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு நிறுவனம் தொடங்குவதாக கூறி ஜே.கே.ரித்தீஷ் 3 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
 
மேலும், இதனை வங்கி மூலமாக அளித்ததாகவும், ஆனால் குறிப்பிட்டப்படி நிறுவனம் தொடங்காமல் ஏமாற்றிவிட்டதாகவும், சென்னை காவல் ஆணையர் அலுவலகம், மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடமும் கடந்த ஆண்டு புகார் அளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
 
எனவே ஜே.கே.ரித்தீஷ் என்ற சிவக்குமார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டு வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த மனு வரும் திங்கள்கிழமை உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments