Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளை புயல்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (09:57 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலின் தென்கிழக்கு மற்றும் தெற்கு அந்தமான் பகுதியை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருகிறது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ள அது இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை புயலாக வலுவடையும் இதற்கு ‘மோக்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வடகிழக்கே நகர்ந்து வங்கதேசம் – மியான்மர் இடையே கரையை கடக்கலாம் என கணிக்கப்படுகிறது. இந்த புயலால் தமிழ்நாட்டில் அதிக மழை பொழிவு இல்லாவிட்டாலும் வட தமிழக கரையோர மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சியால் மழை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக காற்றில் ஈரப்பதம் குறைவதால் வெப்பநிலை அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.k

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments