Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் வளர்ச்சியடைந்ததாக மாயை உருவாக்கப்பட்டுள்ளது - ஜெயலலிதா

Ilavarasan
வியாழன், 17 ஏப்ரல் 2014 (16:54 IST)
குஜராத் தான் வளர்ச்சியில் முதல் மாநிலம் என்பது போன்ற மாயையை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கிருஷ்ணகிரியில் இன்று பேசினார்.
 
கிருஷ்ணகிரியில் இன்று பிற்பகலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய ஜெயலலிதா, நாட்டிலேயே குஜராத் மாநிலம் தான் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் முதன்மையானது என்பது போன்ற மாயை உருவாக்கப்பட்டுவிட்டது.
 
வாய்பாய் ஆட்சி காலத்தில், நாட்டில் நதிகளை இணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் தாமிரபரணி உள்ளிட்ட நதிகளை இணைக்க ரூ.100.97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மகாநதி, கோதாவரி, காவிரி நதிகளை இணைக்க பாஜக உறுதி அளிக்குமா? காவிரியில், தமிழகத்துக்கு உரிய நீரைப் பெற்றுத் தர பாஜக உறுதி அளிக்குமா? நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்கத் தேவையான ரூ.6,500 வழங்க தயார் என்று பாஜக கூற முடியுமா என்று ஜெயலலிதா அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
 
மேலும், அனைத்துத் துறைகளிலும் குஜராத்தைக் காட்டிலும் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் அவர் பேசினார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments