Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசுதான் முதல் குற்றவாளி: வைகோ ஆவேசம்

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2017 (05:56 IST)
நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பு படிக்க முடியாமல் போன அனிதாவின் கனவு தற்கொலை என்ற வடிவில் கலைந்து போனது குறித்து தமிழகமே கவலையில் மூழ்கியுள்ள நிலையில் அனிதாவின் தற்கொலைக்கு காரணமான முதல் குற்றவாளி மத்திய அரசுதான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



 
 
கடைசி வரை தமிழக மக்கள் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் என நம்பினர். ஆனால் மத்திய அரசு தமிழக அரசையும், தமிழக மாணவர்களையும் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டது. இதில் மத்திய அரசு தான் முதல் குற்றவாளி. மோடி தான் அனிதாவின் மரணத்திற்கு பதில் சொல்ல வேண்டும்
 
தமிழகத்திற்கு நீட் தேவையில்லை என கடைசி தமிழர்களின் போராட்டத்திற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. அனிதாவை போல இன்னொரு உயிர் போகுமுன் தகுந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் ' என்று வைகோ கூறினார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசின் சாயம் வெளுக்கிறது.. விஜய் கட்சி நிர்வாகி நடிகர் ராஜ்மோகன் அறிக்கை..!

எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த ராஜேந்திர பாலாஜி.. மன்னிப்பு கேட்டாரா?

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதி.. நாசா அறிவிப்பு..!

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய எக்ஸ் வலைத்தளம்.. என்ன ஆச்சு?

ஹோலி பண்டிகை அன்று முஸ்லிம்கள் வெளியே வர வேண்டாம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments