Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலுவிழந்தது நாடா புயல்: மிதமான மழைக்கே வாய்ப்பு!!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2016 (12:16 IST)
வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் இலங்கை அருகே நேற்று குறைந்த காற்றழுத்ததாழ்வுப் பகுதியாக ‘‘நாடா’’ உருவானது. அது தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கியது. 


 
 
இதனால், தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் குறாவளி காற்றுடன் மழை பெய்யும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 
 
இந்நிலையில் இன்று காலை ‘நாடா’ புயலின் நகர்விலும், வேகத்திலும் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அந்த புயல் வலு இழந்து விட்டதாக சென்னை வானிலை கூறியுள்ளது. 
 
அடுத்த 12 மணி நேரத்தில் நாடா புயல் வலு இழந்து விடும். இந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி வருகிறது. நாடா புயல் வலு இழந்தாலும் அது நாளை (வெள்ளி) அதிகாலை கடலூர்-வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம்-புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். சென்னையில் மழை மிதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

உலக சாதனைக்காக சிகரம் குழுவினர் நடத்திய ஒயிலாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments