Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலுவிழந்தது நாடா புயல்: மிதமான மழைக்கே வாய்ப்பு!!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2016 (12:16 IST)
வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் இலங்கை அருகே நேற்று குறைந்த காற்றழுத்ததாழ்வுப் பகுதியாக ‘‘நாடா’’ உருவானது. அது தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கியது. 


 
 
இதனால், தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் குறாவளி காற்றுடன் மழை பெய்யும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 
 
இந்நிலையில் இன்று காலை ‘நாடா’ புயலின் நகர்விலும், வேகத்திலும் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அந்த புயல் வலு இழந்து விட்டதாக சென்னை வானிலை கூறியுள்ளது. 
 
அடுத்த 12 மணி நேரத்தில் நாடா புயல் வலு இழந்து விடும். இந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி வருகிறது. நாடா புயல் வலு இழந்தாலும் அது நாளை (வெள்ளி) அதிகாலை கடலூர்-வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம்-புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். சென்னையில் மழை மிதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments