Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்து “கின்னஸ்” சாதனை படைத்தவர் மனோரமா: கருணாநிதி

1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்து “கின்னஸ்” சாதனை படைத்தவர் மனோரமா: கருணாநிதி
, திங்கள், 12 அக்டோபர் 2015 (00:23 IST)
நகைச்சுவை நடிகை மனோரமா மறைவுவுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்து “கின்னஸ்” சாதனை படைத்தவர் நடிகை மனோரமா என திமுக தலைவர் கருணாநிதி புகழாரம் சூட்டியுள்ளார்.
 

 
நகைச்சுவை நடிகை மனோராமா மறைவுவுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் செனறு அவரது உடலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, கண்ணீர்விட்டார்.
 
நடிகை மனோராமா மரணம் குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆச்சி" என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட மனோரமா நேற்றிரவு மறைந்து விட்ட செய்தியினை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
 
அவர் திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக புகழ்க் கொம்பின் உச்சியிலே வீற்றிருந்த நேரத்திலும், என்பாலும், என் குடும்பத்தினர்பாலும் மிகுந்த அன்பு கொண்டு, குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே இருந்தவர். அண்ணா அவர்கள் எழுதிய “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்”, நான் எழுதிய “உதய சூரியன்”, “மணிமகுடம்”, தம்பி சொர்ணம் எழுதிய “விடை கொடு தாயே” போன்ற நாடகங்களில் “அல்லி” போன்ற சிறப்பான பாத்திரங்களை ஏற்று கழக மாநாடுகளில் எல்லாம் நடித்ததன் மூலம், திராவிட இயக்க நடிகையாகவே கருதப்பட்டவர் மனோரமா.
 
நடிகை மனோரமா 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்து “கின்னஸ்” உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் என்பது இவருக்குள்ள தனிப் பெருமை ஆகும். ஆச்சி மனோரமா நகைச்சுவை நடிகையாக, குணசித்திர நடிகையாக, பாடகியாக திரையுலகில் கடந்த ஐம்பதாண்டு காலமாக வாழ்ந்தவர்.
 
 “பத்மஸ்ரீ” விருது, “புதிய பாதை” திரைப்படத்தின் மூலம் “சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது”, தமிழ்நாடு அரசின் “கலைமாமணி விருது” என பல விருதுகளை மனோரமா பெற்றுள்ளார். சில நாட்களுக்கு முன்பு கூட அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க விருக்கிறார் என்ற செய்தி வந்தது. அதற்குள் இன்று வந்த அவரது மறைவு திரைப்பட உலகிற்கு ஒரு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அன்புத் தாயை இழந்து வாடும் தம்பி பூபதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil