Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபை நேரடி ஒளிபரப்பு விவகாரம்; பயமா முதல்வரே? – ட்ரெண்ட் செய்யும் மய்யத்தார்!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (08:51 IST)
தமிழக சட்டசபை கூட்டம் நடந்து வரும் நிலையில் அதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தினர் ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் இந்த சட்டசபை கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

இதை சுட்டிக்காட்டிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சட்டசபை நிகழ்ச்சிகளை வாக்குறுதி அளித்தவாரே நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இதை தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தினர் ட்விட்டரில் #பயமா_முதல்வரே #சட்டசபை_நேரடி_ஒளிபரப்பு உள்ளிட்ட ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments