Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மநீம பொருளாளர் வீட்டில் ஐடி ரெய்டு! – கணக்கில் வராத 8 கோடி பறிமுதல்!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (09:45 IST)
மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளர் சந்திரசேகர் வீட்டில் நடந்த ஐடி ரெய்டில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளரும், தொழிலதிபருமான சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரில் உள்ள சந்திரசேகர் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு ஆகியவற்றில் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. தேர்தல் சமயத்தில் நடந்த இந்த சோதனை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments