Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை என கமல் அறிவிப்பு: ரஜினி ஆதரவு இல்லாததால் விரக்தியா?

Webdunia
ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (18:19 IST)
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியலில் இணைந்து செயல்படுவார்கள் என கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்தபோதிலும் ஒரு சில அரசியல் விமர்சகர்கள் மட்டும் சரியாக, கமல் ரஜினி இருவரும் அரசியலில் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என்று கூறி வருகின்றனர்
 
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றம் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என அறிவித்தது. கமல்ஹாசன் மற்றும் அவருடைய கட்சித் தொண்டர்களுக்கு ஏமாற்றமாக இருந்ததாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் சற்று முன்னர் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடவில்லை என கமல் ஹாசன் அறிவித்தார். இரு கட்சிகள் எழுதி வைக்கும் அரசியல் நாடகத்தில் எந்த பாத்திரமும் வேண்டாம் என்றும், 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதை தனது நோக்கம் என்றும் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார் 
 
ரஜினியின் மக்கள் மன்றம் ஆதரவு கொடுத்து இருந்தால் கமல்ஹாசன் கட்சி கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு இருக்குமென்றும், ரஜினி ஆதரவு கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் தான் கமல் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments