Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்புமனு தாக்கல் செய்ய டூவீலரை தள்ளிக்கொண்டு வந்த மநீக வேட்பாளர்!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (22:14 IST)
டூவீலரை தள்ளிக்கொண்டு வந்த மநீக வேட்பாளர்!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் டூவீலரை தள்ளி கொண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மக்கள் நீதி மய்யம் சார்பாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுபவர் முகமது ஹசீப். இவர் பெட்ரோல் உயர்வை கண்டித்து தனது இரு சக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். 
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுக்கடங்காத அளவில் உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் இதனை கண்டிக்கும் வகையில் தனது இரு சக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்ததாகவும் இதே ரீதியில் பெட்ரோல் நிலை உயர்ந்து கொண்டே சென்றால் யாரும் டூவீலரை ஓட்ட முடியாது என்றும் தள்ளிக்கொண்டு தான் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகத்தான் தான் இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்ததாகவும் கூறியுள்ளார், இதனால் சில மணி நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments