Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

Prasanth Karthick
வெள்ளி, 31 ஜனவரி 2025 (18:48 IST)

டெல்லி சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து 7 எம்.எல்.ஏக்கள் பதவி விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் இடையே மும்முனை போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யமுனை நதியில் பாஜக விஷம் கலப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்த களேபரங்களுக்கு நடுவே தற்போது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏக்கள் திடீரென கட்சியிலிருந்து விலகியுள்ளனர். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு சீட் வழங்கக்கோரி அவர்கள் கேட்டும் அவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டதால் அவர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

 

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இப்படி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் பதவி விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியின் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த அட்டாக் ஆரம்பமா? 26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தடுத்த இந்திய ராணுவம்.. வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments