Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எல்.ஏக்களின் உரிமையை பறிப்பது சரியல்ல! – முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (10:28 IST)
எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பணத்தை எடுப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி கோரி வருகிறது. இந்நிலையில் எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண பணிகளுக்காக எடுத்துக் கொள்ள அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு பணம் எடுத்துக் கொள்வது கண்டிக்கத்தக்கது. எம்.எல்.ஏக்களின் தார்மீக உரிமையை அரசு பறிப்பது சரியல்ல” என்று தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கை நீட்டிப்பதை குறித்து உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments