நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா..! – பாரதியார் பிறந்தநாளில் முதல்வர் ட்வீட்!

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (11:29 IST)
சுதந்திர போராட்ட வீரரும், தமிழ் கவியுமான மகாகவி பாரதியாரின் 140வது பிறந்தநாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்குறித்து பதிவிட்டுள்ளார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றவர்களில் ஒருவர் மகாகவி பாரதியார். சுதந்திர போராட்ட கருத்துகளை தனது பாடல்கள் வழியே பாமர மக்களையும் சென்றடைய செய்தவர் பாரதியார். இன்று அவரது 140வது பிறந்தநாளில் பலரும் அவர் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாரதியார் குறித்து பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா! திறம்பாட வந்த மறவன்! அறம்பாட வந்த அறிஞன்! படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று! தமிழுக்குத் தொண்டுசெய்த அப்பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும்!” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொகுதி மாறி போட்டியிடுகிறாரா சி.வி. சண்முகம்? என்ன காரணம்?

அதிமுக கூட்டணியில் தவெக சேர வேண்டுமானால் ஒரே ஒரு நிபந்தனை தான்: ஆர்வி உதயகுமார்

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments