Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவரை சந்திக்க இருக்கும் ஸ்டாலின்? அன்பில் மகேஷ் தகவல்

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (13:02 IST)
நீட் விவகாரத்தில் விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவரை சந்தித்து பேசுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். 

 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு தாக்கல் செய்த நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூடி நீட் விலக்கு மசோதாவை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி உள்ளது. 
 
இந்த மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தார். அப்போது ஆளுநரும் நீட் விலக்கு குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 
 
இந்நிலையில் நீட் விவகாரத்தில் விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவரை சந்தித்து பேசுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும், நீட் விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments