Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாண் மசோதாவுக்கு எதிராக கூடிடுவாங்கன்னு பயம்! – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (11:13 IST)
தமிழகத்தில் நடக்க இருந்த கிராம சபை கூட்டங்களை தமிழக அரசு ரத்து செய்துள்ளது குறித்து மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக நடக்காமல் இருந்த கிராம சபை கூட்டத்தை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நாளை கிராம சபை கூட்டம் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா பரவல் அபாயம் இருப்பதால் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின் “வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் கிராம சபை கூட்டத்தை கூட்டினால் அதற்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றி விடுவார்கள் என பயந்து கிராம சபை கூட்டத்தை ரத்து செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து மக்கள் சகஜமாக பயணிக்க செய்துவிட்டு, கொரோனாவை காரணம் காட்டி அதிமுக அரசு கிராம சபை கூட்டத்தை ரத்து செய்துள்ளது. கூட்டம் ரத்து செய்யப்பட்டாலும் திமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் வீடு வீடாக சென்று வேளாண் மசோதா குறித்து எடுத்துரைப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments