Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவினர் அராஜகம்; நீதி கிடைக்க திமுக துணை: ஸ்டாலின் ஆறுதல்!

Webdunia
திங்கள், 11 மே 2020 (13:31 IST)
விழுப்புரம் சிறுமியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க திமுக துணை நிற்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை. 
 
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகிலுள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை நேற்று இருவர் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர். இதில் அந்த மாணவி 95% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  
 
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்ட நிலையில், மாணவியின் தந்தைக்கும், முருகன் தரப்புக்கும் ஏற்கனவே இருந்த முன்பகையே இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.  
 
இந்த முன்பகை காரணமாக ஏற்கனவே அந்த மாணவியின் சித்தப்பா  வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில் தற்போது மாணவிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்திய நிலையில் அதிமுக பிரமுகர்கள் முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
தற்போதைய தகவலின் படி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, 
 
விழுப்புரம் சிறுமியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க திமுக துணை நிற்க வேண்டும். சிறுமியின் மரணத்தில் தொடர்புடையவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும்படி செய்ய வேண்டும் என கோரியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments