மத்திய அரசுடன் இணைந்து மினி ஆக்ஸிஜன் நிலையங்கள்! – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
புதன், 19 மே 2021 (11:06 IST)
தமிழகத்தில் மத்திய அரசுடன் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக மினி ஆக்ஸிஜன் நிலையங்கள் அமைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் புதியதாக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பலரும் நிதியளித்து வருகின்றனர். இந்நிலையில் முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி இடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த காணொலி வழியான ஆலோசனை நடந்தது.

இந்நிலையில் இன்று தொழில்துறையினருடனான ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுடன் இணைந்து தமிழகம் முழுவதும் 142 மினி ஆக்ஸிஜன் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், தமிழகத்திற்கு 3.5 கோடி தடுப்பூசிகள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிதாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் இருந்து கிளம்பும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்..!

பாமக தலைவராக அன்புமணி தொடர முடியாது.. டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

அடுத்த கட்டுரையில்
Show comments