மக்கள் அனைவரும் மறக்காமல் ஓட்டு போட வேண்டும்! – முதல்வர் வேண்டுகோள்!

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (10:10 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அனைவரும் மறக்காமல் வாக்கு செலுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் பலர் காலை முதலே ஆர்வமாக தனது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் தனது வாக்குகளை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தமிழகத்தின் 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். பொதுமக்கள் அனைவரும் மறக்காமல் தனது வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். கோவையில் துணை ராணுவத்தை அழைக்கும் அளவு எந்த பிரச்சினையும் இல்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல்.. 60 சதவிகிதத்தை தாண்டிய வாக்கு சதவீதம்.. இன்னும் சில நிமிடங்களில் கருத்துக்கணிப்பு..!

அஜித் வீடு, காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: கோலிவுட்டில் பரபரப்பு!

சபரிமலை சீசன்: பக்தர்களுக்காக 3 சிறப்பு ரயில்கள்.. இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

SIR திருத்தத்தை கண்டித்து போராட்டம் நடத்தும் தவெக!.. விஜய் கலந்து கொள்வாரா?!...

புல்வாமா தாக்குதலுக்கே இன்னும் பதில் கிடைக்கவில்லை: டெல்லி குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments