Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் இந்த திடீர் மாற்றங்கள்? கருத்தாய் பேசும் ஸ்டாலின்!!

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (16:04 IST)
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒதுக்கப்பட்டத்தை பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 
 
தமிழகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்த போது நோயாளிகளின் எண்ணிக்கை பற்றிய தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கவனித்து வந்தார். அவரது செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் திடீரென அவர் ஓரங்கட்டப்பட்டு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் முன்னிறுத்தப்பட்டார்.
 
இதனிடையே கடந்த இரு தினங்களாக அவருக்குப் பதில் தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையியில், மக்களை பாதிக்கும் மிகப்பெரிய சுகாதார பேரிடர் பிரச்னையில் முதலில் சுகாதாரத்துறை அமைச்சர் ஒதுக்கப்பட்டார் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 
 
இது குறித்து அவர் விரிவாக கூறியதாவது, மக்களை பாதிக்கும் மிகப்பெரிய சுகாதார பேரிடர் பிரச்னையில் முதலில் சுகாதாரத்துறை அமைச்சர் ஒதுக்கப்பட்டார். பின்னர் சுகாதார செயலாளரை முன்னிலைப்படுத்திய நிலையில் அவரையும் பிறந்தள்ளி, தலைமை செய்லாளரையே தனது செய்தி தொடர்பாளராக மாற்றி அரசியல் செய்து வருகிறார் முதல்வர் என குற்றம்சாட்டியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments