Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடியுடன் தொலைபேசியில் உரையாடிய ஸ்டாலின்

Webdunia
சனி, 6 ஜனவரி 2018 (12:43 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு தொலைபேசி வாயிலாக கேட்டுக்கொண்டார். 

 
தமிழக போக்குவரத்து துறை தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். தமிழக அரசு நிறைவேற்றாததால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பனிக்கு திரும்ப வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்நிலையில் திமுக செயல் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தாமாக முன்வந்து தமிழக முதல்வர் எடப்பாடியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments