Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் பதவி விலகல்

வீரமணி பன்னீர்செல்வம்
ஞாயிறு, 18 மே 2014 (15:25 IST)
நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் பதவி விலகுகிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வியை தழுவின. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
 
திமுக வேட்பாளர் தேர்வில் ஸ்டாலின் தலையிட்டதாகவும், கூட்டணி முயற்சியில் ஈடுபடவில்லை என்றும், அதனால் திமுக தோல்வியை தழுவியதாகவும் புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக தோல்விக்கு பொறுப்பேற்று அனைத்து பதவியிலிருந்தும் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.
 
இன்று திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். மு.க.ஸ்டாலின் திமுக பொருளாளராகவும், இளைஞர் அணி செயலாளராகவும் இருந்தார். மேலும், தேர்தல் பணிக்குழுவில் முக்கிய இடம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments