Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலை தீர்வல்ல.. நீட் ஒரு தேர்வே அல்ல! – முக ஸ்டாலின் ஆவேசம்!

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (10:50 IST)
நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மதுரை மாணவி நீர் தேர்வு மன உளைச்சலாம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்து படிப்புக்கான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. முன்னதாக நீட் மன உளைச்சலாம் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியே மறையாத நிலையில் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

மேலும் ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் ”நீட் அச்சத்தினால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. நீட் மாணவர்களை நிலைகுலைய வைப்பதை அவர்களது மரணங்களே உணர்த்துகின்றன. மீண்டும் சொல்கிறேன் தற்கொலை என்பது தீர்வல்ல.. நீட் என்பது ஒரு தேர்வே அல்ல” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments