Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமையில் வாடிய தியாகராஜர் பாகவதர் பேரனுக்கு ரூ.5.லட்சம்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (09:30 IST)
எம்.கே.தியாகராஜர் பாகவதர் பேரனுக்கு அரசு சார்பில் உதவி செய்ய மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

 
தியாகராஜர் பாகவதரின் பேரன் சாய்ராம் நேற்று முன்தினம் தலைமை செயலகம் வந்திருந்தார். அவர் முதல்வரை தனி பிரிவில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில், எங்களது குடும்பம் வறுமையில் சிக்கி தவிப்பதாகவும், வாடகை கொடுக்க கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 
 
இதனைத்தொடர்ந்து இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதை அறிந்ததும் உடனடியாக அந்த மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
 
அதன்படி, எம்.கே.தியாகராஜர் பாகவதர் பேரனுக்கு அரசு சார்பில் குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒன்றினை ஒதுக்கித் தரவும் மற்றும் ரூ.5 லட்சம் நிதியுதவியையும் வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நிதி நிறுவனங்களில் 72 மணி நேரம் சோதனை.! ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்.!!

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைப்பு.! பயணிகள் ஏமாற்றம்.!!

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments