Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை 75வது சுதந்திர தின நினைவு தூண்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (10:03 IST)
இன்று நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னையில் நினைவு தூணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்தியாவின் 75வது சுதந்திரதினம் இன்று நாட்டு மக்களால் விமரிசியாக கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தால் பொதுமக்கள் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பின்னர் சென்னையில் மெரினா கடற்கரை அருகே அமைக்கப்பட்டுள்ள 75வது சுதந்திர தினத்தை நினைவுப்படுத்தும் நினைவுத்தூணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார், அந்த தூணின் உச்சியில் அசோக சக்கரமும், அதை கீழே நான்கு சிங்கங்கள் தாங்கி கொண்டிருப்பதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments