Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 25 லட்சம் தடுப்பூசி; தமிழகம் சாதனை – மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (08:34 IST)
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் முகாம்கள் அமைத்து 20 லட்சம் தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்றது. இரவு 7 மணி வரை அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டதுடன், தடுப்பூசி செலுத்த ஆதார் அவசியமில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தடுப்பூசி முகாம் நிறைவடைந்த நிலையில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “கொரோனாவை தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை மாபெரும் பேரியக்கமாக நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இன்று 25 இலட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை! இதுவரை 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இமாலய சாதனை!” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தெற்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.! ஸ்டாலினுக்கு ராகுல் போட்ட பதிவு..!!

பதவிக்காக தன்மானத்தை இழந்த திமுக எம்.பி.க்கள்.! ஜெயக்குமார் கடும் விமர்சனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments