Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லீவு விட்ட மாதிரி வெளியே சுத்தி வறாங்க..! – முழு ஊரடங்கு குறித்து முதல்வர் விளக்கம்!

Webdunia
ஞாயிறு, 23 மே 2021 (09:35 IST)
தமிழகத்தில் நாளை முதல் முழு முடக்கம் அமல்படுத்தப்படும் நிலையில் அதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு வாரமாக தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்தது. எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாளை முதல் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முழு ஊரடங்கு குறித்து விளக்கமளித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்வதற்காக தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் பலர் விடுமுறை அளித்தது போல அவசியமின்றி வெளியே சுற்றி வருகின்றனர். கொரோனா சூழலை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள் உயிரை பொருட்படுத்தாது பாடுபட்டு வருகின்றனர்.

முன்கள பணியாளர்களுக்கு இதற்கு மேல் அழுத்தத்தை கொடுக்க முடியாது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாடசாலைகள் திறக்கப்படாததால் மனஅழுத்தம் உருவாக கூடும், விரைவில் அவர்கள் கல்விக்கான வழியையும், எதிர்காலத்தையும் உருவாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments