Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுமா? – முதல்வர் விளக்கம்!

Webdunia
ஞாயிறு, 4 ஜூலை 2021 (13:02 IST)
தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் முழுமையாக இயங்காத சூழல் உள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும் மாணவர்கள் நலன் கருதி பள்ளி திறப்பிற்கு முன் மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் “பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மருத்துவ வல்லுனர்கள் இன்னமும் எந்த முடிவும் எடுக்கவில்லை” என கூறியுள்ளார். எனவே மத்திய அரசின் குழந்தைகளுக்கான தடுப்பூசி அறிவிப்பை பொறுத்தே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை..! கடன் பிரச்சினையால் விபரீத முடிவு.!!

கனமழையால் தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் சேதம்.!

குற்றால அருவிகளில் குளிக்கலாம்.. மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments