Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு யாரையும் காப்பாற்ற முயற்சிக்க கூடாது – முக ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (10:30 IST)
சாத்தான்குளம் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தமிழக அரசு காப்பாற்ற முயற்சிக்க கூடாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் கொலை வழக்கில் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காப்பாற்ற அரசு முயற்சிக்க கூடாது என மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் ”சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டு, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது நம்பிக்கையை அளிக்கிறது. அதேசமயம் கைது செய்யப்பட்டுள்ள காவலர்கள் மட்டுமல்லாமல் இதில் மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. pஏருக்கு சிலரை கைது செய்துவிட்டு அப்படியே விட்டுவிட கூடாது. இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு அனைவரும் சட்டத்தின் பிடியில் கொண்டு வரப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் காவலர்களுக்கு எதிராக சாட்சியம் வழங்கியுள்ள கான்ஸ்டபிள் ரேவதி, மாஜிஸ்திரேட் பாரதிதாசன் உள்ளிட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments