Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதிங்க..! – பிரதமரிடம் கோரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (13:56 IST)
இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழர்கள் குறித்த கோரிக்கைகள் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசியல் பயணமாக இன்று டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் அங்கு தங்கிய பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி மற்றும் மேம்பாடு குறித்தும் பேச உள்ளார்.

இன்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளார். அதில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக தவிக்கும் தமிழ் மக்களுக்கு தேவையான மருந்துகள், உணவு உள்ளிட்டவற்றை யாழ்பாணத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக தமிழக அரசு வழங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments