Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குப்பை கொட்டக்கூட லாயக்கில்லாதவர்கள் என்பதை மாற்றுங்கள் – அரசுக்கு ஸ்டாலின் அறிக்கை!

Webdunia
திங்கள், 25 மே 2020 (12:40 IST)
தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை அகற்றுவதில் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் தொடர்ந்து மருத்துவபணிகளில் ஈடுபட்டு வருவதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழக அரசின் தொய்வான நடவடிக்கைகளால் மேலும் நோய் தொற்று பரவுகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் பணி புரியும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அதிக நேரம் பணி புரிவதால் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். பேரிடர் காலங்களில் அவர்களது அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றாமல் இருப்பது மனிதாபிமானமற்ற செயல்” என கூறியுள்ளார்.

மேலும் “குப்பை கொட்டக்கூட லாயக்கில்லாத அரசு என்ற குற்றச்சாட்டையாவது குறைந்த பட்சம் மாற்றி பாதுகாப்பான முறையில் எச்சரிக்கையாக குப்பைகளை அகற்ற வேண்டும். ஒவ்வொரு நாளும் எவ்வளவு மருத்து கழிவுகள் அறிவியல்புர்வமாக அகற்றப்பட்டன என்பதை தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments