Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் க்ளாஸ் வெச்சா போதுமா? ஆண்ட்ராய்ட் போன் வேணாமா? – முக ஸ்டாலின் கண்டனம்!

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (11:14 IST)
கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக பள்ளி வகுப்புகள் நடத்தப்படும் நிலையில் செல்போன் இல்லாததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வழியாகவும், தொலைக்காட்சிகள் வழியாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செல்போன் வசதி, தொலைக்காட்சி வசதி இல்லாததால் பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடர முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் உளுந்தூர்பேட்டையில் மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்போன் இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு,க.ஸ்டாலின் ”ஆனலைன் வகுப்புகள் தொடங்கும் முன்னரே அனைத்து மாணவர்களிடமும் செல்போன் வசதி உள்ளதா? மாதாமாதம் இணையத்திற்கு பணம் செலுத்தும் அளவு வசதி இருக்கிறதா? ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்கள் எப்படி ஒரே செல்போனில் படிக்க முடியும்? என்பவை குறித்து அரசு முறையாக ஆய்வுகளை செய்யாமல் அலட்சியம் காட்டியதன் விளைவே நித்யஸ்ரீ மரணம்” என குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் தான் ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக பேசவில்லை என கூறியுள்ள அவர் ஆன்லைன் வகுப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் சென்று சேர சமமான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெடிக்கல் காலேஜ் மெஸ் மீது விழுந்த விமானம்.. 40 மாணவர்கள் கதி என்ன? அதிர்ச்சி தகவல்..!

விமான விபத்தில் சிக்கிய முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.. அதிர்ச்சி தகவல்..!

அகமதாபாத் விமான விபத்து: 10 நிமிடங்கள் தாமதத்தால் விமானத்தை மிஸ் செய்த பயணி.. உறவினர்கள் மகிழ்ச்சி..!

அகமதாபாத் விமான விபத்து: 50 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்.. 7 குழந்தைகள் நிலை என்ன?

விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் பயணம் செய்தாரா? பயணிகள் லிஸ்ட்டில் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments