Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரம் தாழ்ந்து தரைமட்டத்துக்கும் போகிறது: அண்ணா சிலை காவிக்கொடி விவகாரம் குறித்து முக ஸ்டாலின்

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (13:20 IST)
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் வகையில் ஈடுபட்டுவரும் செயல்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசப்பட்டது, எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு போடப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பெரியார், எம்ஜிஆர் சிலைகளை அடுத்து தற்போது அண்ணா சிலை மீதும் மர்ம நபர்கள் கை வைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த சம்பவத்திற்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: 
 
கன்னியாகுமரி, குழித்துறையில் பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து தரம் தாழ்ந்து தரைமட்டத்துக்கும் கீழே போகிறது அவர்களின் எண்ணம்.தங்களை அடையாளம் காட்ட தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மேதைகளிடம் வன்மம் காட்டுகிறார்கள்! குற்றவாளிகளைக் கைது செய்க!

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments