Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமே “நான் ஒரு விவசாயி”ன்னு சொல்லாதீங்க! – எடப்பாடியார் மீது ஸ்டாலின் ஆவேசம்!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (13:55 IST)
மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக அரசு பெரும் துரோகமிழைத்துள்ளதாக முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள விவசாய மசோதாவிற்கு தேசிய அளவில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மத்திய அரசின் இந்த மசோதாவை எதிர்த்து பாஜக கூட்டணியில் உள்ள அகாலிதள அமைச்சர் தனது பதவியையே ராஜினாமா செய்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதற்கு விசிக, கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிமுக ஆதரவு தெரிவித்தது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் சட்டங்களுக்கு அதிமுக ஆதரவு அளித்து விவசாயிகளுக்கு பெரும் துரோகத்தை செய்துள்ளது. இனி ஒருபோதும் எடப்பாடி பழனிசாமி தன்னை ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ள கூடாது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments