Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னத்தம்பி போல் கிரண்பேடியையும் மாற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (07:11 IST)
பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்த சின்னத்தம்பி யானையை முகாமில் அடைத்தது போல் மக்களின் திட்டங்களை நிறைவேற்ற தடையாக இருக்கும் புதுவை ஆளுனர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதுவையில் ஆளுனர் கிரண்பேடி, முதல் நாராயணசாமி இடையேயான பனிப்போர் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. ஆளுனருக்கு எதிராக முதல்வர் நடத்தி வரும் தொடர் தர்ணா போராட்டம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழக தலைவர்கள் பலர் முதல்வர் நாராயணசாமியின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் புதுவை முதல்வர் நாராயணசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்த சின்னத்தம்பி யானையை முகாமில் அடைத்தது போல் மக்களுக்கான திட்டங்களுக்கு எதிராக முட்டுக்கட்டையாக இருக்கும் புதுவை ஆளுனர் கிரண்பேடியை பணிமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் புதுச்சேரி மாநிலத்தையே திஹார் சிறையாக மாற்றி வருகிறார் எனவும் ஸ்டாலின் விமர்சித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments