Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னத்தம்பி போல் கிரண்பேடியையும் மாற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (07:11 IST)
பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்த சின்னத்தம்பி யானையை முகாமில் அடைத்தது போல் மக்களின் திட்டங்களை நிறைவேற்ற தடையாக இருக்கும் புதுவை ஆளுனர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதுவையில் ஆளுனர் கிரண்பேடி, முதல் நாராயணசாமி இடையேயான பனிப்போர் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. ஆளுனருக்கு எதிராக முதல்வர் நடத்தி வரும் தொடர் தர்ணா போராட்டம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழக தலைவர்கள் பலர் முதல்வர் நாராயணசாமியின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் புதுவை முதல்வர் நாராயணசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்த சின்னத்தம்பி யானையை முகாமில் அடைத்தது போல் மக்களுக்கான திட்டங்களுக்கு எதிராக முட்டுக்கட்டையாக இருக்கும் புதுவை ஆளுனர் கிரண்பேடியை பணிமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் புதுச்சேரி மாநிலத்தையே திஹார் சிறையாக மாற்றி வருகிறார் எனவும் ஸ்டாலின் விமர்சித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments