Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்துறை அமைச்சருக்கு உள்ளூர் தலைவர் கொடுத்த பதிலடி!!

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (07:58 IST)
அமித்ஷா பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் மூன்றாவது மொழியாக இந்தி பயிற்றுவிப்பதற்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமித்ஷா தனது ட்விட்டரில் இந்தி குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் “இந்திய கலாச்சாரத்தின் உடைக்க முடியாத அடையாளம் இந்தி. அதன் அசல் தன்மையும் எளிமையும்தான் இந்தியின் பலமே! 
 
இந்தி மற்றும் பிராந்திய மொழிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே புதிய கல்விக் கொள்கை அமைக்கப்பட்டுள்ளது. மொழி, கலாச்சாரம் என்று இந்தியா வேறுப்பட்டிருந்தாலும் ஒட்டு மொத்த தேசத்தையும் ஒன்றிணைக்கும் மொழியாக இந்தி இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்தி இந்நாட்டை இருங்கிணைக்கிறது என்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் கெடுப்பதாகத்தான் இந்தி இருக்கிறது. இந்தியை காப்பாற்றுவதை விட கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவதில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments