மீத்தேன், சிஏஏ போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (11:02 IST)
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் சி.ஏ.ஏ உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு நடுவே தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றை சட்டசபை கூட்டத்தில் அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் எட்டுவழி சாலை, மீத்தேன், சிஏஏ உள்ளிட்டவற்றிற்கு எதிராக போராடியவர்கள் மீது தமிழக அரசு தொடுத்த வழக்குகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக ஆட்சிக்கு வந்து சில நாட்களில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது குறிப்ப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments